ஜோதிட அருளாலயம்
2011 சனிப்பெயர்ச்சி பலன்கள் கணித்தவர்
தன ஆகர்ஷன குபேர ராஜ வஸ்ய எண் கணித நிபுணர்
யுவா சாய் ஆதித்யா
ஜோதிட அருளாலயம், குமரையா கோவில் ஸ்டாப்,
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு : 8124755347, 8870870859, 8870870829
15-11-2011 அன்று சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சித்திரை நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்சசியாகிறார். துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி பகவான் அனைத்து ராசிக்கும் நன்மையே செய்கிறார்.
மேஷ ராசி அன்பர்களே,
உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் உச்சம் பெறும் சனி பகவான் உங்களுடைய ராசி அதிபதியின் செவ்வாய்க்குரிய நட்சத்திரத்தின் பாதசாரத்தில் செல்வதால் உங்களுடைய மனைவி, குடும்ப ஒற்றுமை பலப்படும், இதுவரை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வேறுபாடுகள் நீங்கி களத்திர ஒற்றுமை வலுப்படும், கடந்த காலத்தில் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள் இடுப்புவலி நீங்கும். பணம் உங்களைத் தேடி வரும். இதுவரை வசூலிக்கப்படாத கடன்கள் வசூலாகும். புதிய முதலீடுகள் சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் செலவினங்கள் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும். கலைத் தொழில், தொழிலநட்பமான வேலைகள், இரும்பு சம்பந்தப்படட் வேலைகள் நல்ல பலன் தரும், கூட்டுத் தொழில் பலன் தராது. தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு தரும். அறுபடை வீடுகளுக்கு சென்று வர தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்
ரிஷப ராசி அன்பர்களே,
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சத்ரு நிவாரண சனியாக சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். ஆறாம் உச்சம் பெறும் சனி பகவான் உங்களுடைய 7, 12க்குரிய செவ்வாய் பகவானுக்குரிய சித்திரை நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும். பழைய நண்பர்கள் விலகிச் செல்வார்கள். புதிய நண்பர்கள் இணைவார்கள். கடன்கள் குறையும். வழக்கு வெற்றி பெறும். நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அனுகூலம். தவறான சேர்க்கைகளை குறைத்துக் கொள்ளவும். செர்த்துக்களை விற்பதும் புதிதாக வாங்குவதும் வாகனங்களை மாற்றுவதிலும் சிறப்பான பலனைத் தரும்.
மிதுன ராசி அன்பர்களே,
உங்கள் ராசிக்கு 9, 10க்குடையவர் 5ம் இடத்தில் பஞ்சம சனியாக உலா வருகிறார். குல தெய்வ கோவில் சென்று வழிபட நன்மைகள் மிகும். பூர்வீக இடமாற்றம் நிகழும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வில்லங்க சொத்துக்கள் கிடைக்காது. தாய் தந்தையர் உடல் நலக் குறைவு ஏற்படும். பழைய வீடுகளை வாகனங்களை புதுப்பிக்கும் நேரம் இது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இன்ஜினியரிங், வீடு கட்டுதல், பழைய இரும்பு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சொத்துக்கள் மனைவி பெயரில் வாங்கலாம். குழந்தைகள் நன்மதிப்பை பெற்றுத் தருவர். சாஸ்தா வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.
கடக ராசி அன்பர்களே
ராசிக்கு 4ம் இடத்தில் அஷ்டார்த்தமச் சனியாக உலா வருகிறார். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனம் சஞ்சலம் உருவாகும். தொழில் விருத்தி உண்டாகும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். கற்றக் கல்விக்கு மாறாக தொழில் அமையும். தொழில் இடமாற்றம் நிகழும். தீய பழக்க வழக்கங்களில் செல்லாமல் இருக்க கோவில்களுக்குச் செல்வதும் தீர்த்த யாத்திரை மேற்கொள்வதும் சிறப்பான பலன் தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பந்தயங்களில் வெற்றி பெறும் வாய்ப்புண்டு- தீர்க்கதரிசிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். திருச்செந்தூர் சென்று வரவும். அம்பாள் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.
சிம்ம ராசி அன்பர்களே
உங்களது ராசிக்கு 3ம் இடத்தில் தைரிய ஸ்தானத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். பிரிந்து சென்ற நண்பர்கள் இணைவார்கள். அறிவாற்றல் மேம்படும். தலைமை வகிக்கும் பதவி கிட்டும். வழக்கு வெற்றி கிட்டும். கடன்கள் குறையும். முகப்பொலிவு குறையும், உடல் நலம் சோர்வு ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு தொழில் மேம்படும். குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறுவர். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட குறைகள் நீங்கி நன்மை பெருகும்.